අද අපි අරන් එන්නෙ උතුරෙ තියෙන රස ගුණ සපිරි steamed කෑමක්.
මේකෙ පිරවුම සාදන ක්රම කිහිපයක් අපි දැකපු නිසා ඒකෙන් දෙකක් සඳහන් කරනවා කැමති විදිහට හදාගෙන කන්න… දෙවිදිහටම රහයි
අවශ්ය ද්රව්ය:
හාල් පිටි 100 g
කුරක්කන් පිටි 50g
මුං ඇට 25 g
සීනී හෝ හකුරු (රස අනුව)
පොල්
ලුණු ඉතා ස්වල්පයක්
1.පිරවුම සාදාගන්නා ආකාරය:
මුං ඇට කබලේ රන්වන් පාට වනතුරු බැදගෙන පියලි වෙන් කරගන්න. ඉන්පසු
වතුර ඉතා ස්වල්පයක් දමා තැම්බෙන්න තබා වතුර සිඳීගෙන එනවිට ගාගත් පොල්, රස වැඩි කරගන්න කබලෙ බැදගෙන කොටාගත් සූදුරු හා ගම්මිරිස් ස්වල්පයක් ද, සීනී හෝ හකුරු සහා ලුණු එක් කරගෙන පැනි පොල් සාදාගන්නා ආකාරයට පිස ගන්න.
දෙවෙනි ක්රමයට ගන්නෙ තම්බාපු මුං ඇට. ඉස්සරින්දා දවසේ පෙඟෙන්නට තබා මෘදු වෙනතෙක් තම්බා ගත්
මුං ඇට පොල් , හකුරු, ලුණු, එනසාල් සහා කුරුඳු පොතු කැබැල්ලක් සමඟ මිශ්ර කර පිසගන්න. මේ ක්රමයට මුං ඇටවල පෝෂණ ගුණය වැඩි කරගත හැකි මුත් කල් තබාගැනීමේ හැකියාව අඩුවේ.
2.හාල් පිටි සහ කුරක්කන් dough එක සාදා ගන්නා ආකාරය:
මම නම් ගත්තේ හාල් පිටි 100 g සහ කුරක්කන් පිටි 50g අනුපාතයෙන්. ලුණු වතුර ඉතා ස්වල්පයක් සහ ජලය සමග මිශ්ර කර භාජනයේ නොඇලෙන පදමට සකස් කර ගන්න.
ඉන්පසු ඉතා කුඩා ප්රමාණයේ බෝල ලෙස ගෙන අල්ලේ තුනී කර එය මැද්දට පිර වුම දමා “කැවුමක්”ආකාරයට සකසා ගෙන කෙසෙල් කොළයක් මත තබා හුමාලයෙන් තම්බා ගන්න.
இன்று வடக்கிலிருந்து ஒரு சுவையான வேகவைத்த உணவைக் கொண்டு வருகிறோம்.
இந்த மோதகத்தை தயாரிப்பதற்கான பல வழிகளை நாம் பார்த்திருப்பதால், அவற்றில் இரண்டை இங்கே குறிப்பிடுகிறோம். உங்களுக்கு விரும்பிய முறையில் செய்துகொள்ளலாம். இரண்டுமே சுவை தான்.
தேவையான பொருட்கள்:
100 கிராம் அரிசி மாவு
குரக்கன் மாவு 50 கிராம்
பயறு 25 கிராம்
சர்க்கரை அல்லது வெல்லம் (சுவைக்கு ஏற்ப)
தேங்காய்
உப்பு மிகக் குறைவாக
1. செய்முறை:
பயறை பொன்னிறமாக வறுத்து, உடைத்துக்கொள்ளவும். பின்னர் சிறிதளவு தண்ணீர் நன்கு கொதித்து வற்றியதும், தேங்காய் துருவல் சேர்த்து கொதிக்க விடவும், சிறிது வறுத்த சீரகம் மற்றும் மிளகு சேர்த்து, சர்க்கரை அல்லது வெல்லம், உப்பு சேர்த்து, பானி தேங்காய் செய்வது போல் செய்துகொள்ளவும்.
இரண்டாவது முறைக்கு, வேகவைத்த பயறு பயன்படுத்தப்படுகிறது. முந்தைய நாள் தண்ணீரில் ஊறவைத்த பயறை மென்மையாகும் வரை அவிக்கவும்.
தேங்காய், வெல்லம், உப்பு, ஏலக்காய் மற்றும் ஒரு துண்டு கருவாப்பட்டையுடன் அவித்த பயறை கலந்து கிளறவும். இந்த முறையானது ஊட்டச்சத்து தரத்தை அதிகரிக்கவாய்ப்பாக அமையும்.
2. அரிசி மாவு மற்றும் குரக்கன் மாவு கலந்து செய்வது எப்படி:
அரிசி மாவு 100 கிராம், குரக்கன் மாவு 50 கிராம் என்ற விகிதத்தில் எடுத்தேன். மிகக் குறைந்த அளவு உப்பு மற்றும் தண்ணீருடன் கலந்து, கையில் ஒட்டாத அளவுக்கு கலவையை தயாரிக்க வேண்டும்.
அதன் பின் மிகச் சிறிய உருண்டைகளை எடுத்து உள்ளங்கையில் வைத்து மெல்லியதாக தட்டி அதனுள் பயறு கலவையை வைத்து உருண்டை வடிவில் செய்து கொள்ளவும். பின்னர் வாழை இலையில் வைத்து நீர் ஆவியில் வேக வைக்கவும்.
